20 ஆண்டுகளுக்குப் பிறகு அரசு பொறியியல் கல்லூரிகளுக்கான பாடத்திட்டத்தில் மாற்றம் - வரும் 18ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தகவல்
Aug 8 2022 12:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
20 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் பாடத்திட்டம் மாற்றம் செய்யப்படுகிறது. மாற்றங்களுடன் கூடிய புதிய திட்டம் வரும் 18ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் பொறியியல் பட்டப்படிப்புகள் பயிற்று விக்கப்படுகின்றன. 20 ஆண்டுகளுக்கு பிறகு பொறியியல் கல்லூரி பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. வரும் 12ம் தேதி இதுதொடர்பாக நடைபெறவுள்ள கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் பெறப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து வரும் 18ம் தேதி முதல் இந்த புதிய பாடத்திட்டத்தை அமலுக்கு கொண்டுவர அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், படித்து முடித்ததும் எளிதில் வேலைவாய்ப்பை பெறும் வகையில் அண்ணா பல்கலைக்கழகம் இந்த முயற்சியில் இறங்கியுள்ளது.