தமிழக அமைச்சரின் பெயரை பயன்படுத்தி திமுகவினர் மணல் கொள்ளை - பொதுமக்கள் பரபரப்பு புகார்
Aug 8 2022 11:55AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக அமைச்சரின் பெயரை பயன்படுத்தி அக்கட்சியினர் மணல் கொள்ளையில் ஈடுபட்டுவருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ளது காயாமொழி. இப்பகுதி கனிம வளங்கள் நிறைந்த செம்மண் பூமி ஆகும். இங்கு சரல் மண் எடுக்க அனுமதி பெற்றுக்கொண்டு திமுகவினர் சில மாதங்களாக லாரி லாரி ஆக செம்மண்னை வெட்டி கடத்திச் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுமார் 50 அடி ஆழம் வரை தோண்டி, தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் செம்மண்ணை கடத்தி வருகின்றனர். இதன் மூலம் இப்பகுதியின் நிலத்தடி நீர் வற்றி, விவசாயம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மணல் கடத்தலை தடுக்க பொதுமக்கள் முயன்றால் அவர்களை, அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், துரை முருகன் ஆகியோர் பெயர்களை சொல்லி திமுகவினர் மிரட்டுவதாகவும் இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.