பவானிசாகர் வனப்பகுதியையொட்டிய கிராமத்தில், கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தை - வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது
Aug 8 2022 1:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் வனச்சரகத்திற்குட்பட்ட கிராமத்தில், கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தை, வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.
சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானிசாகர் வனச்சரகத்திற்குட்பட்ட புதுபீர் கடவு கிராமத்தில், சிறுத்தை ஒன்று, கடந்த 6 மாதங்களாக, கால்நடைகளை வேட்டையாடி வந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்திற்குள்ளாகினர். சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணித்து வந்த வனத்துறையினர், அந்த சிறுத்தை, கடந்த இரு தினங்களாக ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு தண்ணீர் குடிக்க சென்று வருவதை உறுதி செய்தனர். இதையடுத்து, அந்த வழியில் வனத்துறையினர் கூண்டு வைத்தனர். இந்த நிலையில் இன்று காலை அந்த கூண்டில் சிறுத்தை சிக்கியதால், கிராம மக்கள் நிம்மதியடைந்தனர். கூண்டில் சிக்கிய 5 வயது மதிக்கத்தக்க அந்த சிறுத்தையை, அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.