சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என். ரவியுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு - மரியாதை நிமித்தமான சந்திப்பு என தகவல்
Aug 8 2022 1:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆளுநர் ஆர்.என். ரவியுடன் அரசியல் பற்றி பேசியதாகவும், ஆனால் அதனை ஊடகங்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாது எனவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ஆளுநர் உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் 2 நாள் பயணமாக டெல்லி சென்றிருந்த நிலையில், இன்று காலை டெல்லியில் இருந்து சென்னை வந்தார். இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என். ரவியை, நடிகர் ரஜினிகாந்த், சந்தித்து பேசினார். சுமார் 30 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், ஆளுநர் ஆர்.என். ரவியுடன் அரசியல் பற்றி பேசியதாகவும், ஆனால் அதனை ஊடகங்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார். ஆளுநர் உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது எனவும் அவர் விளக்கம் அளித்தார். மேலும், மீண்டும் அரசியலுக்கு வருவீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், மீண்டும் அரசியலுக்கு வரும் எண்ணமில்லை எனக் கூறினார். பால், தயிர் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வுக்கு பதிலளித்த திரு. ரஜினிகாந்த், அது குறித்து கருத்து கூற விரும்பவில்லை எனவும் குறிப்பிட்டார்.