தூத்துக்குடியில் உணவக ஊழியரை கொலை செய்த வழக்கு : 8 பேரை கைது செய்து போலீசார் விசாரணை
Aug 8 2022 1:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடியில், உணவக ஊழியரை கொலை செய்த வழக்கில், 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி ஆசிரியர் காலனி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில், கடந்த 5ஆம் தேதி உணவு சாப்பிட்ட நபர், அதற்கு பணம் கொடுக்காததால், ஊழியருடன் தகராறு ஏற்பட்டது. சாப்பிட்ட உணவிற்கு காசு கொடுக்காமல் சென்றவர், மீண்டும் ஒரு கும்பலுடன் திரும்பி வந்து, உணவக ஊழியர்கள் 4 பேரை சரமாரியாக தாக்கினார். இதில், செந்தில் முருகன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 3 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், சக்திவேல், பரமசிவன, ராபர்ட், ரகு உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர்.