திருப்பூரில் அ.ம.மு.க நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் : கட்சி வளர்ச்சிப் பணிகள், உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனை
Aug 8 2022 2:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.ம.மு.க சார்பில் சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், சார்பு அணி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தேர்தல் பிரிவு துணைச் செயலாளரும், மாநகர் மாவட்டச் செயலாளருமான அ. விசாலாட்சி தலைமையில் நடைபெற்றது. கட்சி வளர்ச்சிப் பணிகள் மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பாக ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மாவட்ட அவைத் தலைவர் திரு.பாலுசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
திருப்பூர் வடக்கு மாவட்டம், அ.ம.மு.க. சார்பில், அவிநாசி தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், வடக்கு மாவட்டச் செயலாளர் பொங்கலூர் திரு.N.ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. அவிநாசி தெற்கு ஒன்றியச் செயலாளர் திரு.R.மோகன் தம்பி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கட்சி வளர்ச்சிப் பணிகள் மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டன.