கோவை: கிணத்துக்கடவு பகுதியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அ.ம.மு.க. நிர்வாகிகள் மனு
Aug 8 2022 2:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அ.ம.மு.க. நிர்வாகிகள் மனு அளித்தனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில், பள்ளி, கல்லூரிகள், குடியிருப்புகள் கோயில், பேருந்து நிலையம் என பரபரப்பாக பொதுமக்கள் கூடும் முக்கிய சாலையில் டாஸ்மாக் மதுபான கடை திறக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், இந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அ.ம.மு.க. கோவை கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் கீதாஞ்சலி தலைமையில், டாஸ்மாக் மதுபானக் கிடங்கு மேலாளர் மற்றும் பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.