ஆதிச்சநல்லூரில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிகள் : 3 செ.மீ கொண்ட தங்கத்தால் ஆன நெற்றி பட்டயம் கண்டுபிடிப்பு
Aug 8 2022 3:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் தொல்லியல் துறை சார்பில் நடந்து வரும் அகழாய்வு பணியில் தங்கத்தால் ஆன நெற்றி பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் தமிழர் நாகரிகத்தின் தொட்டில் என்று அழைக்கப்படுகிறது. இங்கு மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கின. கடந்த 8 மாத காலமாக நடந்து வரும் இந்த அகழாய்வு பணியில் 70-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், மனித எலும்புக்கூடுகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. இந்தநிலையில், ஆதிச்சநல்லூரில் சில வாரங்களுக்கு முன்பு தங்கத்தால் செய்யப்பட்ட காதணி கண்டுபிடிக்கப்பட்டது. இது சுமார் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தை சேர்ந்தது என்றும், 20 கேரட் தங்கத்தால் செய்யப்பட்டது என்பதும் தெரியவந்தது. இந்நிலையில், தற்போது மூன்று சென்டிமீட்டர் நீளம் கொண்ட தங்கத்தால் ஆன நெற்றிபட்டயம் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், வெண்கல வடிகட்டி, 2 கிண்ணம் தாங்கியுடன் கூடிய அலங்கார கிண்ணம் மற்றும் 18 இரும்புப் பொருட்களும் கண்டெடுக்கப்பட்டன.