அமமுக துணைப் பொதுச்செயலாளராக முன்னாள் அமைச்சர் C. சண்முகவேலு நியமனம் - கழக தலைமை நிலையச் செயலாளராக சேலம் மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் வீரபாண்டி S.K. செல்வம் நியமனம் : தலைமைக் கழகம் அறிவிப்பு
Aug 10 2022 2:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமமுக துணைப் பொதுச்செயலாளராக முன்னாள் அமைச்சர் திரு. C. சண்முகவேலு நியமிக்கப்பட்டுள்ளார். கழக தலைமை நிலையச் செயலாளராக சேலம் மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் திரு. வீரபாண்டி S.K. செல்வம் நியமிக்கப்படுவதாகவும் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளராக முன்னாள் அமைச்சரும், திருப்பூர் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளருமான திரு. C. சண்முகவேலு இன்று முதல் நியமிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கழக தலைமை நிலையச் செயலாளராக, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சேலம் மத்திய மாவட்டக் கழகச் செயலாளருமான திரு. வீரபாண்டி S.K. செல்வம் இன்று முதல் நியமிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை, கழக தலைமை நிலையச் செயலாளர் பொறுப்பிலிருந்த திரு.C. சண்முகவேலு, கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்த திரு. வீரபாண்டி S.K. செல்வம் ஆகியோர் அவரவர் வகித்து வந்த பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கழக துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு. C. சண்முகவேலு, ஏற்கெனவே கழக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலுள்ள திரு. M. ரெங்கசாமி மற்றும் திரு.G. செந்தமிழன் ஆகியோருடன் இணைந்து செயல்படுவார் -
கழக தலைமை நிலையச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு. S.K. செல்வம் ஏற்கெனவே கழக தலைமை நிலையச் செயலாளர் பொறுப்பிலுள்ள திரு. S.V.S.P. மாணிக்கராஜாவுடன் இணைந்து செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு கழக உடன் பிறப்புகள் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாகவும் அமமுக தலைமைக்கழக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.