புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு மதுரையில் இருந்து திண்டுக்கல் செல்லும் வழியில் கழகக் கொடிகளுடன் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
Aug 10 2022 5:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, மதுரையில் இருந்து திண்டுக்கல் செல்லும் வழியில், கழகக் கொடிகளுடன் தொண்டர்கள் வரவேற்றனர்.
அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, திண்டுக்கல் மாவட்டம் வாடிப்பட்டி அருகே வந்தபோது, அ.தி.மு.க. கொடியுடன் பெண்கள் வரவேற்றனர்.
இதனைத்தொடர்ந்து திண்டுக்கல் டோல்கேட் அருகே கழகத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் சின்னம்மாவை வரவேற்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில், புரட்சித்தாய் சின்னம்மாவை, பொதுமக்கள் மற்றும் பெண்கள் சந்தித்து,
அதிமுக-வை பழைய நிலைமைக்கு நீங்கள்தான் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தினர். நிச்சயம் அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்படுவேன் என்றும், அ.தி.மு.க.வை பழைய நிலைமைக்குக் கொண்டு வருவேன் எனவும் சின்னம்மா அப்போது உறுதிபடத் தெரிவித்தார்.