தஞ்சை மாவட்டம் கல்லணைக்கு கூடுதல் தண்ணீர் திறப்பு - கொள்ளிடம் கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை
Aug 10 2022 4:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தஞ்சை மாவட்டம் கல்லணைக்கு கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்படுவதால், கொள்ளிடம் கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதால் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. திருச்சி மாவட்டம் முக்கொம்பில் இருந்து தஞ்சை மாவட்டம் கல்லணைக்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 33 ஆயிரத்து 176 கனஅடி வீதமும், காவிரியில் வினாடிக்கு 8 ஆயிரத்து ஒன்று கன அடி வீதமும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கொள்ளிடம் கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.