மக்களுக்கு எதிராக பல திட்டங்களை வகுக்கும் பாஜக அரசுக்கு எதிராக, மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு வரும் 30-ம் தேதி முற்றுகை போராட்டம் நடைபெறும் - இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச்செயலாளர் முத்தரசன் அறிவிப்பு
Aug 10 2022 4:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மக்களுக்கு எதிராக பல்வேறு திட்டங்களை கொண்டு வரும் மத்திய பாஜக அரசை கண்டித்து, வரும் 30-ம் தேதி மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக மறியல் போராட்டங்களில் ஈடுபட போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் திரு. முத்தரசன் தெரிவித்துள்ளார். திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுதந்திரத்தை பாதுகாப்போம், சோசலிசத்தை இங்கமைப்போம், பாசிசத்தை தோற்படிப்போம் என்ற முழக்கத்தோடு 75-ம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடவுள்ளதாகவும் தெரிவித்தார்.