கும்பகோணத்தில் போதிய சரக்கு ரயில்கள் வரவில்லை என புகார் - நெல் மூட்டைகளுடன் வரிசை கட்டி காத்துக்கிடக்கும் லாரிகள்
Aug 11 2022 1:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
போதுமான சரக்கு ரயில்கள் இயக்காததால் கும்பகோணம் புறவழிச் சாலையில் 300-க்கும் மேற்பட்ட லாரிகள் நெல் மூட்டைகளுடன் காத்துக் கிடக்கின்றன.
கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், வட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் அரவைக்காக தர்மபுரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய இடங்களுக்கு ரயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. கடந்த மே மாதம் 17ஆம் தேதியிலிருந்து நேற்றுமுன்தினம் வரை சுமார் 80 ஆயிரம் மெட்ரிக் டன் எடையுள்ள நெல் மூட்டைகள் ரயில்கள் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. நாள்தோறும் 120 லாரிகளில் கொண்டுவரப்படும் நெல் மூட்டைகள் சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன. இதனிடையே போதுமான சரக்கு ரயில்கள் இயக்காததால் நெல் மூட்டைகளை ஏற்றுவதற்காக கும்பகோணம் புறவழிச் சாலையில் 300-க்கும் மேற்பட்ட லாரிகள் நெல் மூட்டைகளுடன் காத்துக் கிடக்கின்றன.