மறைந்த மாயத்தேவர் உடலுக்கு அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா நேரில் அஞ்சலி - குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல்
Aug 11 2022 8:38AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க முதல் எம்.பி. மாயத்தேவரின் உடலுக்கு, அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா மலரஞ்சலி செலுத்தியதுடன், குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.
அ.தி.மு.க. முதல் எம்.பி.யான மாயத்தேவர் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் உடல்நலக்குறைவால் காலமானார். அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா சின்னாளப்பட்டிக்கு சென்று, மாயத்தேவரின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், மாயத்தேவரின் குடும்பத்தினர் மற்றும் கழகத்தினருக்கு, சின்னம்மா ஆறுதல் தெரிவித்தார்.