வேளாண் பல்கலைக்கழக முதலாமாண்டு மாணவர் தற்கொலை : விருப்பப்பட்ட துறை கிடைக்காததால் மன உளைச்சலில் விபரீத முடிவு
Aug 11 2022 9:56AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவை வேளாண் பல்கலைக்கழக முதலாமாண்டு மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசுப் பேருந்து நடத்துனராகப் பணியாற்றி வரும் பழனி என்பவரது மகன் பிரோதாஸ் குமார், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பயோடெக் முதலாமாண்டு படித்து வந்தார். இவர், இளங்கலை வனவியல் பட்டப்படிப்பு பயில வேண்டும் என்ற விருப்பத்துடன் இருந்து வந்ததாகவும், அது கிடைக்காததால், பயோ டெக் படிப்பு படித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், மாணவர் பிரோதாஸ் குமார், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மாணவரின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விருப்பப்பட்ட துறை கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்த மாணவர் பிரோதாஸ் குமார், ஏற்கனவே ஒருமுறை வீட்டில் இருந்தபோது தற்கொலைக்கு முயன்றதாகவும், அவரை பெற்றோர்கள் சமாதானப்படுத்தி கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளதும், முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.