நீலகிரி மாவட்டம் கூடலூரில் தொடர் மழை : 50 ஆண்டுகள் பழமைவாய்ந்த நூலகக்கட்டிடம் இடிந்து விழுந்தது
Aug 11 2022 10:36AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீலகிரி மாவட்டம் கூடலூரில் தொடர் மழையால், 50 ஆண்டுகள் பழமைவாய்ந்த நூலகக்கட்டிடம் இடிந்து விழுந்தது. கூடலூர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இப்பகுதியில், 50 ஆண்டுகள் பழமைவாய்ந்த நூலகம் உள்ளது. இதனை ஏராளமானோர் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், பலத்த மழையால், இந்த நூலகம் திடீரென இடிந்து விழுந்தது. இதையடுத்து, நூலகத்திலுள்ள புத்தகங்களைப் பாதுகாக்கும் பணி நடைபெற்று வருகிறது. இரவு நேரத்தில் நூலகம் இடிந்ததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.