கரூர் மாயனூர் காவிரி கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
Aug 11 2022 10:47AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கரூர் மாயனூர் காவிரி கதவணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால், கரையோரப் பகுதிகளில் இருப்பவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மாயனூர் காவிரி கதவணையில் இருந்து இருந்து 98 கண் மதகு வழியாக காவிரியில், ஒரு லட்சத்து 82 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கிளை வாய்க்கால் மற்றும் கரையோரங்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.