சென்னையில் காரில் சென்ற பெண்ணை கத்தி முனையில் கூட்டு பலாத்காரம் : 6 பேர் கைது
Aug 11 2022 10:59AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில் காரில் சென்ற பெண்ணை கத்தி முனையில் கூட்டு பலாத்காரம் செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். போரூர் பகுதியை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் நேற்று முன்தினம் இரவு காரில் சென்று கொண்டிருந்தார். அய்யப்பன்தாங்கல், கொளுத்துவான்சேரி அருகே சென்று கொண்டிருந்தபோது காரை வழி மறித்த மர்ம நபர்கள், கத்தியை காட்டி மிரட்டி காரை ஓட்டி வந்த ஓட்டுநரை தாக்கி விரட்டிவிட்டு, காரில் அமர்ந்திருந்த பெண்ணை காரோடு கடத்திச் சென்றனர். பின்னர் அங்கிருந்த காலியிடத்தில் அந்த பெண்ணை கத்தி முனையில் 6 பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.