நீலகிரியில் குடியிருப்பு பகுதியில் திடீரென ஏற்பட்ட விரிசலால் பரபரப்பு - ஏரளாமான வீடுகள் சேதமடைந்ததால் மக்கள் அச்சம்
Aug 18 2022 12:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கன மழையால் நீரோட்டம் அதிக அளவு ஏற்பட்டு பூமி பிளவு ஏற்பட்டிருக்கலாம் என, இந்திய மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக கனமழை பெய்ததால், பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. அதிகபட்சமாக நடுவட்டம் மற்றும் கூடலூர் பகுதியில் கனமழை கொட்டித்தீர்த்தது. கடந்த 4 நாட்களாக உதகையில் இருந்து கூடலூர் வழியாக கேரளா மற்றும் கர்நாடகா செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 80 மீட்டர் தூரம் பூமிக்குள் உள்வாங்கியது. கூடலூர் பகுதியில் 20 வீடுகளில் மிகப்பெரிய பிளவு ஏற்பட்டு, எட்டு வீடுகள் பூமிக்குள் மெதுவாக புதையுண்டு வந்தது. இதனால் இந்த வீடுகளில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்திய மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு ஆராய்ச்சி மைய அலுவலர் திரு.மணிவண்ணன், புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆய்வாளர் திரு.லோகநாதன், வருவாய்த்துறையினர் நேரில் ஆய்வு செய்தனர்.