தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் தவறான சிகிச்சையால் பெண் பலி
Aug 18 2022 10:42AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே தவறான சிகிச்சையால் பெண் பலியானதாகக் கூறி தனியார் மருத்துவமனை மீது உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அங்குள்ள மண்ணங்காடு கிராமத்தை சேர்ந்த சுமதிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை கடந்த 13 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனிடையே சுமதிக்கு அறுவைசிகிச்சை செய்த பின் அவருக்கு இரத்தப்போக்கு அதிகரித்து ஆபத்தான நிலையில் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தவறான முறையில் அறுவை சிகிச்சை செய்ததால் தான் சுமதி இறந்ததாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.