சென்னை சோழிங்கநல்லூரில் ஆவின் பால் பண்ணையில் காவலாளிகளுக்கு 3 மாதங்களாக ஊதியம் இல்லை - காவலாளிகள் போராட்டம்
Aug 18 2022 10:52AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள ஆவின் பால் பண்ணையில் உள்ள காவலாளிகளுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்திற்கு கடந்த மூன்று மாதங்களாக ஆவின் நிறுவனம் பணம் செலுத்தாததால் காவலாளிகளுக்கு மாத ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே காசோலை உடனே வழங்க வேண்டும் என காவலாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.