சித்த மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு அனுமதி அளித்தாலும் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடைபெறும் - தமிழக அரசு தகவல்
Sep 23 2022 12:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சித்த மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு அனுமதி அளித்தாலும் தற்போது உள்ள நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடைபெறும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள கண் மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை திறந்து வைத்து, கண் தானம் செய்த குடும்பத்தினரை கெளரவித்த பின் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.