தமிழகத்தில் 5 ஆயிரத்து 583 பள்ளி கட்டடங்கள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது - சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளையில் தமிழக அரசு தகவல்

Sep 23 2022 7:51AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் 5 ஆயிரத்து 583 பள்ளி கட்டிடங்கள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மதுரையை சேர்ந்த சமூகநல ஆர்வலர் திரு.செந்தில் முருகன் தாக்‍கல் செய்த மனுவில், சமீபகாலமாக பல பள்ளிக்‍கூடங்களின் மேற்கூரை மற்றும் கட்டிடங்கள் மிகவும் மோசமாக இடிந்து விழும் நிலையில் உள்ளதாகத் தெரிவித்தார். இதனால் அரசு பள்ளிகள், அங்கன்வாடி கட்டிடங்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்து அதில் ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களை அகற்றி புதிய கட்டிடம் கட்ட கமிட்டி அமைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டுமென கோரியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணா பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் 5 ஆயிரத்து 583 பள்ளி கட்டிடங்கள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக, தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 2021-2022 ஆண்டு தமிழகத்தில் 2 ஆயிரத்து 553 சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டுள்ளதாகவும், 2022-2023-ல் 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 3 ஆயிரத்து 30 சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் அகற்றப்பட உள்ளதாகவும் தெரிவிக்‍கப்பட்டது. இதனை பதிவுசெய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்துவைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00