புதுக்கோட்டை அருகே செயல்பட்டு வரும் தனியார் கல்குவாரிக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - உடனடியாக மூடக்கோரி இரவு பகலாக தொடர் போராட்டம்

Sep 23 2022 1:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுக்கோட்டை அருகே செயல்பட்டு வரும் தனியார் கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் இரவு பகலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வத்தனாகுறிச்சி ஊராட்சியில் உள்ள வெவ்வயல்பட்டி மற்றும் ஆதிதிராவிடர் கூட்டு குடியிருப்பு அருகே கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தனியாருக்கு சொந்தமான கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி குளத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அப்பகுதி மக்கள் நேற்று காலை காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

இதையடுத்து அவர்களிடம் அதிகாரிகள் சமரச பேச்சு வார்த்தை நடத்தியும் பயன் இல்லாமல் போனது. பேச்சுவார்த்தையை ஏற்காத அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட கல் குவாரியை மூடும்வரை தங்களது போராட்டம் தொடரும் என அறிவித்து, அங்கேயே சமைத்து சாப்பிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கல் குவாரிக்கு எதிரான போராட்டம் தொடர்வதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00