சென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் போராட்டம் : என்.ஐ.ஏ. அலுவலகத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
Sep 23 2022 1:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் நடத்திவரும் போராட்டத்தின் எதிரொலியாக சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு தொடர்புடைய இடங்களிலும் நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக தமிழ்நாட்டில் 10 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அந்த அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை புரசைவாக்கத்தில் அமைந்துள்ள தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.