சேலம் அருகே குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் அமைக்க எதிர்ப்பு : காவல்நிலையத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்
Sep 23 2022 3:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த ஜலகண்டாபுரம் தோரமங்கலம் ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இந்த பகுதியில் டாஸ்மாக் மதுபான கடைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதற்கான கட்டுமான பணிகள் நிறைவடையும் நிலையில் இப்பகுதியில் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்க கூடாது என்று கிராமசபை கூட்டத்தில் இரண்டு முறை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்பகுதியில் டாஸ்மாக் கடைகள் அமைக்க கூடாது என பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கையும் எடுக்காததால், அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் மதுக்கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜலகண்டாபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உத்தரவாதம் அளித்ததை எடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.