திண்டுக்கல் மாவட்டத்தில், காற்றடிக்காமல், பெடல் இல்லாமல், தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட விலையில்லா சைக்கிள்கள் - வீடுகளுக்கு எடுத்துச் செல்ல பெரும் அவதிக்கு ஆளான மாணவ-மாணவிகள்
Sep 23 2022 5:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே தமிழக அரசு சார்பில் வழங்கிய விலையில்லா சைக்கிள்களில் முறையான பாகங்கள் இன்றி பழுதுடன் கொடுக்கப்பட்டதால் மாணவ மாணவிகள் அவதிக்குள்ளாகினர்.
நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டியில் அரசு உதவிபெறும் தனியார் பள்ளியில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி தலைமையில் தமிழக அரசு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கிய சைக்கிள்கள் பெரும்பாலும் முழுமையாக பொருத்தப்படாமலும், பொருத்தப்பட்ட சைக்கிள்களில் பெடல், முன்கூடை உட்பட பாகங்கள் இல்லாமலும் பெரும்பாலான சைக்கிள்கள் காற்று கூட இல்லாமல் பழுதுடன் கொடுக்கப்பட்டன. இதனால் மாணவ மாணவிகளின் கிராமம் மற்றும் தோட்டப் பகுதிகளிலுள்ள தங்களில் வீடுகளுக்கு சைக்கிள்களை கொண்டு செல்ல மிகவும் சிரமப்பட்டனர்.