கும்பகோணத்தில் கதண்டு வண்டு கடித்து பள்ளி சிறுவர் சிறுமியர்கள் 10 பேர் பாதிப்பு
Sep 23 2022 4:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கும்பகோணத்தில், கதண்டு வண்டு கடித்து பள்ளி சிறுவர் சிறுமியர்கள் 10 பேர் பாதிப்படைந்தனர். உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
கும்பகோணம் நாலுரோடு அருகே, தனியார் டிராக்டர் தொழிற்சாலையில் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில், மியாவாக்கி குறுங்காடுகள் அமைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விவசாயிகள் தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள் மற்றும் பள்ளி சிறுவர் சிறுமியர் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி நிறைவு பெறும் சமயத்தில் அருகில் இருந்த மரத்திலிருந்த கதண்டு கூட்டில் இருந்து, நூற்றுக்கணக்கான கதண்டு வண்டுகள் ஒரே நேரத்தில் அனைவரையும் தாக்கியதால் பெரியவர்கள் முதல் சிறுவர் சிறுமியர்கள் அலறி அடித்து ஓடினர்.
இதில் 10 சிறுவர் சிறுமியர்களும் அரசு மருத்துவமணைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. கதண்டு வண்டு தாக்கியதில் 3 செய்தியாளர்களும் மருத்துவமணையில் சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.