திருட்டி: 21 ஆண்டுகளாக கழிவறைகளை பராமரிக்கும் மகளிரை மிரட்டி அவமதிக்கும் மாநகராட்சி விசிக கவுன்சிலர்
Sep 23 2022 6:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சியில் 21 ஆண்டுகளாக கழிவறையை சுத்தம் செய்து பராமரித்துவரும் தங்களை மிரட்டி , அவமதிக்கும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி விசிக கவுன்சிலர் பிரபாகரனை கண்டித்து சுய உதவிக் குழு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 17 வது வார்டில் உள்ள சுகாதார வளாகம் உள்ளிட்ட 81 கழிப்பிடங்களை அலைகள் கூட்டமைப்பு என்ற மகளிர் சுயஉதவி குழுவினர் சுத்தம் செய்து வந்தனர்.
இதனிடையே, சுய உதவிகுழு பெண்களை நீக்கி விட்டு தனக்கு தேர்தல் வேலை பார்த்தவர்களுக்கு அப்பணியை வழங்க வேண்டும் என்ற முயற்சியில் திமுக சார்பில் போட்டியிட்டு கவுன்சிலராக பதவி ஏற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பிரபாகரன் ஈடுபட்டுள்ளார். கடந்த 6மாதமாக சுய உதவி குழு பெண்களை ஏளனமாக பேசுவதுடன், அவர்களை மிரட்டி வருகிறார். வி.சி.க. கவுன்சிலர் பிரபாகரனை கண்டித்து ஈபி ரோடு பகுதியில் 150 க்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவிகுழு பெண்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.