பேரறிஞர் அண்ணாசிலையை அவமதித்திருப்பது கோழைத்தனமான செயல் என அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கண்டனம் - சிலை அவமதிப்பில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
Sep 26 2022 1:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விழுப்புரம் அருகே பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலை அவமதிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் புரட்சித் தாய் சின்னம்மா, இது கோழைத்தனமான செயல் என தெரிவித்துள்ளார்.
அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் புரட்சித் தாய் சின்னம்மா இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், விழுப்புரம் அருகே கண்டமங்கலத்தில் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலையை அவமதித்திருப்பது கோழைத்தனமான செயல் என்றும், இது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்வதாக புரட்சித் தாய் சின்னம்மா, தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.