மயிலாடுதுறையில் கள்ளச்சாராய விற்பனை குறித்த வீடியோ காட்சிகள் வெளியீடு : போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
Sep 26 2022 2:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மயிலாடுதுறை மாவட்டம் கோனேரிராஜபுரம் பகுதியில் கள்ளச்சாராய விற்பனை நடைபெறுவது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
மயிலாடுதுறை மாவட்டத்தில், கள்ளச்சாராயம் மற்றும் பாண்டி சாராயம், காரைக்கால் மாவட்டத்திலிருந்து கடத்திவரப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. குத்தாலம் அருகே கோனேரிராஜபுரம் பகுதியில், கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுகிறது. டாஸ்மாக்கில் 200 ரூபாய்க்கு விற்கப்படும் வெளிநாட்டு மதுபான வகைகள் விலை அதிகமாக உள்ளதால், காரைக்காலில் இருந்து கடத்தி வரப்படும் சாராயம் ஒரு பாட்டில் நூறு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் அளித்த புகாரின்பேரில், சாராயம் விற்பனையில் ஈடுபட்ட சுதாகர் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
எனினும், சுதாகரின் சகோதரர் சூர்யா, தற்போது அதே பகுதியில் தொடர்ந்து சாராய விற்பனை செய்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுதொடர்பாக வீடியோ காட்சிகளை அப்பகுதி மக்கள், சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.