தூத்துக்குடி: கட்டாத பாலத்திற்கு பல கோடி ரூபாய் செலவு - தி.மு.க. நகராட்சியில் ஊழல் நடந்துள்ளதாக பொதுமக்கள் புகார்
Sep 26 2022 6:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில், கட்டாத பாலத்திற்கு பல கோடி ரூபாய் செலவு செய்ததாக, தி.மு.க. நகராட்சியில் ஊழல் நடந்துள்ளதாக, மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.
காயல்பட்டினம் நகராட்சித் தலைவராக தி.மு.கவைச் சேர்ந்த முத்து முகமது என்பவர் பதவி வகித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதில் பல்வேறு ஊழல் நடைபெற்றிருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு, நிதி நிலை அறிக்கையை மீண்டும் தணிக்கை செய்து நடவடிக்கை வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.