ராணிப்பேட்டையில் பேக்கரியில் சாண்ட்விச் சாப்பிட்ட 3 சிறுவர்களுக்கு வயிற்றுப்போக்கு
Sep 26 2022 6:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராணிப்பேட்டையில், தனியார் பேக்கரியில் சான்ட்விச் சாப்பிட்ட 3 சிறுவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆற்காடு அருகே கோட்டைமேட்டு தெரு பகுதியை சேர்ந்த சாலமன், தனது குடும்பத்துடன் ராணிப்பேட்டைக்கு சொந்த வேலைக்காக சென்றார். பஜார் வீதியில் உள்ள பேக்கரியில் தேநீர் அருந்தச் சென்றபோது, சிறுவர்கள் சைமன், ரூபன் மற்றும் ஜான்சன் ஆகியோர், சாண்ட்விச் சாப்பிட்டுள்ளனர். வீட்டிற்குச் சென்றதும் சிறுவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது, உணவு ஒவ்வாமையே வயிற்றுப்போக்கிற்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை நடத்தி, உணவு தயாரிக்கும் இடத்தில் இருந்த, நிறத்தை கூட்டப் பயன்படும் ரசாயனங்களைப் பறிமுதல் செய்தனர்.