தஞ்சையில் கனமழையால் தண்ணீரில் மிதக்கும் நெல் மணிகள் : உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
Sep 26 2022 6:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தஞ்சையில், இரவில் பெய்த கனமழையால் நெல் மணிகள் தண்ணீரில் மிதக்கும் நிலையில் உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சை மாவட்டத்தில் நேற்றிரவு கனமழை பெய்தது. புதுகல்விராயன்பேட்டை பகுதியில், அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளும், அறுவடை செய்ய வேண்டிய நெல்மணிகளும் சுமார் இரண்டு அடி அளவிற்கு தண்ணீரில் மூழ்கின. எனவே, தமிழக அரசும் உரிய கணக்கெடுப்பு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கல்விராயன்பேட்டையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்குச் சொந்தமான நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், கொள்முதல் செய்ய அதிகாரிகள் தாமதம் செய்வதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.