திருவாரூரில் அறுவடைக்குத் தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள் மழையால் பாதிப்பு : தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
Sep 26 2022 6:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையால், 25 ஆயிரம் ஏக்கர் பரப்பில் அறுவடைக்குத் தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு குறுவை சாகுபடி பணிகள் 60 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எஞ்சிய அறுவடைப் பணிகள் சில வாரங்களில் முடிவடைய உள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் சராசரியாக 22 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்தது. திருவாரூர், மன்னார்குடி, வடுவூர், நீடாமங்கலம், வலங்கைமான் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 25 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட குறுவை நெற்பயிர்கள் நீரில் சாய்ந்தன. குறுவைப் பயிருக்கான காப்பீடு வசதியினை அரசு செய்து தராத நிலையில், பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட குறுவை பயிர் நிலவரங்களை கணக்கிட்டு, ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.