சென்னையில் மழை நேரத்தில் மின்சார இணைப்புகளில் இருந்து தீப்பற்றி எரிந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
Sep 26 2022 6:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில் மழை நேரத்தில், மின்சார இணைப்புகளில் இருந்து தீப்பற்றி எரிந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து, மின்சார வாரியத்திற்குத் தகவல் தெரிவித்தும், அலட்சியமான பதிலே வந்ததாக வேதனையடைந்தனர்.
சென்னையில் இன்று பெய்த சிறு மழைக்கே, சாலைகளில் பதிக்கப்பட்டுள்ள மின்சார இணைப்புகளில் இருந்து தீபாவளிப் பட்டாசு வெடிப்பதுபோன்று பற்றி எரியும் காட்சிகள் தி.நகர் ஹபிபுல்லா சாலை அருகே நிகழ்ந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து, மின்சார வாரியத்திற்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தும், ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் இருப்பதாக பதிலளிக்கப்பட்டது தலைநகரிலேயே மின்சார வாரியத்தின் செயல்பாடு இந்த அளவுக்கு மோசமாக இருந்தால் பிற நகரங்களிலும், கிராமங்களிலும் நிலை என்னவாக இருக்கும்? என்பது கற்பனை செய்ய முடியாதது என பொதுமக்கள் வேதனை தெரிவித்தவாறு சென்றனர்.