திமுக ஊராட்சி மன்ற தலைவர் கொலை மிரட்டல் : பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தற்கொலை முயற்சி
Sep 26 2022 6:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெரம்பலூர் வேப்பந்தட்டை திமுக ஊராட்சி மன்ற தலைவர் கொலை மிரட்டல் விடுப்பதாகக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தடை அருகே உள்ள வடகரை ஊராட்டிக்கு உட்பட்ட மாவிலங்கை கிராமத்தைச் சேர்ந்த மணிமேகலை மற்றும் அவரது குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களை தடுத்து விசாரித்த போலீசார், வயலுக்கு செல்லும் பொது ஓடையை அதே ஊரை சேர்ந்த கன்னுசாமி என்பவர் ஆக்கிரமித்து பாதையை மறித்து வழி விடாமல் தடுத்து வருகிறார் என்றும், மேலும் இவருக்கு ஆதரவாக திமுக ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் என்பவரும் இருந்து வருகிறார் என்றும் கூறியுள்ளனர். தங்களது கால்நடைகளை பராமரிக்க முடியாமலும், தங்கள் நிலத்தை பயிர் செய்ய முடியாமலும் தவித்து வருவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர். மேலும், திமுக ஊராட்சி மன்ற தலைவர் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அவர்கள் கூறினர்.