தொடர் விடுமுறையால் நீலகிரி மலை ரயிலிலில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரிப்பு - இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை நேரில் கண்டுகளித்து உற்சாகம்
Oct 6 2022 2:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தொடர் விடுமுறையால் நீலகிரி மலை ரயிலிலில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது. அவர்கள் மலை ரயிலில் பயணித்து இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் தற்போது இரண்டாம் கட்ட சீசன் துவங்கி உள்ள நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பலரும் மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது தொடர் விடுமுறை காரணமாக தமிழகம் மற்றும் பல மாநிலங்களில் இருந்து வரக்கூடிய சுற்றுலா பயணிகள் நீலகிரி மலை ரயில் பயணத்தின்போது இயற்கை காட்சிகளையும் நீர்வீழ்ச்சிகளையும், குகைகளையும் ரசித்து மகிழ்கின்றனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை ரயில் பயணம் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக இருந்தாலும் சுற்றுலா பயணிகள் இயற்கைக காட்சிகளை ரசிப்பதில் அவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.