திருப்பூரில் குழந்தைகள் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட சிறுவர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் : அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம்
Oct 6 2022 3:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூரில் குழந்தைகள் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட சிறுவர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியளிப்பதாகவும், இதுகுறித்து முறையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், திருப்பூர் மாவட்டம், திருமுருகன் பூண்டி அருகே ஆதரவற்ற குழந்தைகளுக்கான காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட சிறுவர்கள் 3 பேர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு சரியான சிகிச்சை அளிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து முறையான விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும் என திரு.டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.