செல்போன் திருடுவதற்காக ஓடும் ரயிலில் ஏற முயன்ற கொள்ளையன் - கீழே விழுந்து கால் முறிந்ததால், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதி
Oct 6 2022 4:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில் ஓடும் ரயிலில் செல்போன் பறிக்க முயன்ற கொள்ளையன் கீழே தவறி விழுந்து கால் துண்டானது.
சென்னை சென்டரலில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை செல்லும் ரயில் கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தை நெருங்கியபோது, கேட் பகுதியில் ரயில் மெதுவாகச் சென்றது. அப்போது நவீன் என்ற அட்டை நவீன், ரயிலில் ஏறி செல்போனை பறிக்க முயன்றார். இதில் அவர் தவறி விழுந்ததால் கால் துண்டானது.
ரயிலில் ஜன்னல் ஓரம் அமர்ந்திருப்பவர்களிடம் செல்போன் பறித்துச் செல்வதும், ரயிலில் ஏறி பயணிகளின் பாக்கெட்டுகளில் இருந்து செல்போன் திருடுவதையும் நவீன் வழக்கமாக கொண்டிருந்தார். கொருக்குப்பேட்டை இருப்புபாதை காவல்நிலையத்தில் இவர் மீது 6-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நவீன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.