சென்னையின் பல்வேறு பகுதிகளில் மந்த கதியில் நடைபெறும் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி
Oct 6 2022 4:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியில் மெத்தனப் போக்கு நிலவுகிறது. விருகம்பாக்கம் தொகுதிக்குட்பட்ட வேம்புலியம்மன் கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி சாலைகளில் கழிவுநீர் தேங்கியுள்ளது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். பருவமழை தொடங்குவதற்கு முன், மழைநீர் கால்வாய் பணிகளை முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். பணிகளை விரைந்து முடிக்காவிட்டால், போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அப்பகுதி மக்கள் எச்சரித்துள்ளனர்.