அரசு போக்குவரத்து கழக சிஐடியு சங்கத்துடன் டிச.2-ம் தேதி பேச்சுவார்த்தை - அரசு அழைப்பு
Nov 24 2022 3:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் போக்வரத்து கழக சிஐடியு தொழிற்சங்கத்தினர், டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி பேச்சுவார்தைக்கு வரும்படி தொழிலாளர் நலத்துறை அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தொழிலாளர் தனி இணை ஆணையர் முன்னிலையில் வருகிற டிசம்பர் 2 ஆம் தேதி பிற்பகல் இரண்டரை மணிக்கு சென்னை தேனாம்பேட்டை உள்ள D.M.S வளாகத்தில் உள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைக்கு சம்பந்தப்பட்ட அரசு போக்குவரத்து ஊழியர் சிஐடியு மற்றும் நிர்வாகங்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் முற்றுகைப்போராட்டம் போன்ற நேரடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.