கோவை: வால்பாறை தேயிலை எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் முற்றுகை - தேயிலை பறிக்கும் பணிகள் பாதிப்பு
Nov 24 2022 5:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளை காட்டு யானைகள் கூட்டம் முற்றுகையிட்டுள்ளதால் தேயிலை பறிக்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக கேரள எல்லை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் பகல் நேரத்தில் தேயிலை தோட்டத்தில் சுற்றி வருகின்றன. இந்நிலையில், வால்பாறை அடுத்த மூடிஸ் பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட்டுகளில், குட்டிகளுடன் உள்ள யானைக் கூட்டங்கள், தேயிலை தோட்டத்தின் மையப்பகுதியில் முற்றுகையிட்டுள்ளன. இதன் காரணமாக, இன்று காலை முதல் தேயிலை பறிப்பு பணி நிறுத்தப்பட்டுள்ளது, தேயிலை தோட்டத்திலிருந்து யானைக் கூட்டங்களை விரட்ட முடியாமல் வனத்துறையினரும் திணறி வருகின்றனர், தேயிலை தோட்ட தொழிலாளர்களும் யானை கூட்டங்கள் அங்கிருந்து நகர்ந்தால் மட்டுமே, பணிகளைத் தொடர முடியும் என காத்திருக்கின்றனர். அதேவேளையில் அப்பகுதி வழியாக செல்லும் சுற்றுலாப்பயணிகள் யானை கூட்டங்களை வீடியோ எடுத்து மகிழ்கின்றனர்.