திருச்சி: கோரிக்கைகளை வலியுறுத்தி சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் - தமிழக அரசை கண்டித்து முழக்கம்
Nov 24 2022 5:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைத்து தரக்கோரி சுமைப்பணி தொழிலாளர்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில அளவில் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. திருச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட சுமைதூக்கும் தொழிலாளர்கள் கலந்து கொண்டு, தங்களுக்கென நலவாரியம் அமைக்கவேண்டும், அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழக அரசு மற்றும் தொழிலாளர் நல வாரியத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.