கன்னியாகுமரி: விவேகானந்த கேந்திரா சபா மண்டபத்தில் ஸ்ரீ ராமானுஜர் சாம்ராஜ்ய மகோத்சவ நிகழ்ச்சி
Nov 24 2022 5:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டம் விவேகானந்தா கேந்திரத்தில் ஸ்ரீ ராமானுஜ சாம்ராஜ்ய மகோத்சவத்தின் முதல் நாள் நிகழ்ச்சியை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று தொடங்கி வைத்தார். கேந்திராவில் உள்ள சபா மண்டபத்தில் 2 நாட்களுக்கு இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவில், தமிழக பாரம்பரிய முறைப்படி வேட்டி அணிந்து வருகை தந்த ஆளுநருக்கு, விழா குழுவினர், ராமானுஜர் திருவுருவச் சிலையை, நினைவுப் பரிசாக வழங்கினர். தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆன்மீக மடாதிபதி சுவாமிகள் இந்த விழாவில் பங்கேற்றனர். நாளை நடைபெறும் 2வது நாள் நிகழ்ச்சியில் மாநாடு நடைபெறுகிறது. அப்போது, விவேகானந்தா கேந்திராவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ராமானுஜர் திருவுருவச் சிலையை, காணொலிக் காட்சி மூலம் டெல்லியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளதாக விழாக் குழுவினர் தெரிவித்துள்னர்.