கள்ளக்குறிச்சி: விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற மர்ம நபர் - போலீசார் விசாரணை
Nov 24 2022 5:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே விலை உயர்ந்த இருச்சக்கர வாகனத்தை மர்ம நபர் திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. உளுந்துர்பேட்டை அருகே உள்ள செம்மேடு கிராமத்தைச் சேர்ந்த வேலு, தனது வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த தன் விலை உயர்ந்த இருச்சக்கர வாகனம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து, அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், அதிகாலை 1.30 மணியளவில் அடையாளம் தெரியாத மர்ம நபர், லாவகமாக சைடு லாக்கை உடைத்து இருச்சக்கர வாகனத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக வேலு அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.