சென்னை: பெண்ணை கழுத்தை நெறித்து கொன்ற வழக்கில் மாமனார், மாமியார், கணவர் கைது
Nov 24 2022 5:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் சுமித்ரா என்பவர் மரணம் குறித்த பிரேத பரிசோதனை அறிக்கையில் கழுத்தை நெரித்து கொலை என்பது உறுதியானது. இதையடுத்து சுமித்ராவை கொலை செய்ததை மாமியார் ரெஜினா, மாமனார் செல்வகுமார், கணவர் செல்வம் ஆகியோர் ஒப்புக்கொண்டதால் அவர்களை போலீசார் கைது செய்தனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 11ந்தேதி வீட்டில் சடலமாக கிடந்த சுமித்ராவின் உடலை மீட்ட காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுமித்ரா ஏற்கனவே இறந்ததை உறுதி செய்த மருத்துவர்கள் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம மரணம் என பதிவு செய்த போலீசார் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்து இருந்த நிலையில் தற்போது கழுத்து நெரிக்கப்பட்டு சுமித்ரா உயிரிழந்தது உறுதியானது.