தேனி: விவசாய பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு அதிக அபராதம் - இலகுரக வாகன உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்
Nov 24 2022 5:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விவசாய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது காவல்துறையினரால் ஆன்லைன் மூலம் அதிகப்படியான அபராதம் விதிப்பதை கண்டித்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அனைத்து இலகுரக வாகன உரிமையாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேனி மாவட்டத்தில் இருந்து திராட்சை, தேங்காய். வைக்கோல் காய்கறிகள், நெல் உள்ளிட்ட விவசாய பொருட்களை ஏற்றிச்செல்லும் இலகுரக வாகனங்கள் மீது ஆன்லைன் மூலம் அதிகமாக அபராதம் விதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட இலகுரக வாகன உரிமையாளர்கள் விவசாய பொருட்களை எடுத்து செல்லும் வாகனங்களுக்கு விதிக்கப்படும் அபராத விதிமுறையை முற்றிலும் நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.