சென்னை ஆவடி அருகே கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளான கனரக லாரி - சிசிடிவி வீடியோ
Nov 24 2022 5:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை ஆவடி அருகே, கனரக லாரி கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. திருத்தணியிலிருந்து ஆவடிக்கு 15 டன் இரும்புகளை ஏற்றிக் கொண்டு கனரக லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. திருநின்றவூர் அருகே, சென்னை திருப்பதி நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபர், எதிர்பாராத விதமாக குறுக்கே வந்த நாயின் மீது மோதி கீழே விழுந்தார். அவர் மீது மோதாமல் இருக்க லாரி ஓட்டுநர் பிரேக் பிடித்தபோது கட்டுப்பாட்டை இழந்த கனரக லாரி, சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதி, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் சிசிடி காட்சி வெளியாகி உள்ளது.