திருப்பூர்: உடுமலையில் இருசக்கர வாகனத்தை திருடிய மர்ம நபர் - சிசிடிவி காட்சியை வைத்து விசாரணை
Nov 24 2022 5:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூர் மாவட்டம் உடுமலையில், இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடி சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. உடுமலை காளியம்மன் கோயில் அருகில் வசித்து வரும் சிபு ஜோஸ் என்பவர், விலை உயர்ந்த தனது இருசக்கர வாகனத்தை, வீட்டின் முன் நிறுத்தியிருந்த நிலையில், அந்த வாகனம் திருடு போனது. அங்கிருந்த சிசிடிவியில், மர்ம நபர் ஒருவர், அவரது இருசக்கர வாகனத்தை திருடி சென்றது பதிவாகி இருந்தது. உடுமலையில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதால், ரோந்து பணியை போலீசார் தீவிரப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.